25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


விஷால், சந்தானம் கூட்டணியின் சுந்தர் சி. 12 வருடத்திற்கு முந்தைய கதை  “மதகஜராஜா “என்பதால் எப்படி இருக்கும் என்ற சந்தேகம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விஷால், சந்தானம் கூட்டணியின் சுந்தர் சி. 12 வருடத்திற்கு முந்தைய கதை  “மதகஜராஜா “என்பதால் எப்படி இருக்கும் என்ற சந்தேகம் .

 பொங்கலுக்கு குடும்பத்தோடு பார்த்து ரசிக்க கூடிய படம் தான் “மதகஜராஜா”.ஒரு படம் இரண்டு மூன்று வருடங்கள் தாமதம் ஆனாலே நிச்சயம் தோல்விதான் என முத்திரை குத்தி விடுவார்கள். ஆனால் 12 வருடங்கள் கழித்து வெளிவந்தும் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது மதகஜராஜாசுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானத்தின்  ஆர்ப்பாட்டத்தில் வெளிவந்த படம்.

ஊரில்கேபிள்டிவிஆபரேட்டராகஇருக்கும்விஷால்ஒருதிருமணத்திற்குசெல்கிறார்.அங்குபழையநண்பர்கள்அனைவரும்ஒன்றுசேர்கின்றனர்.அவர்களில் சந்தானம் மனைவியுடன் பிரச்சனையில் இருக்கிறார்.இப்படி ஆளாளுக்கு ஒரு பிரச்சனையில் இருக்க அதை விஷால் தலையிட்டு எப்படி தீர்த்து வைக்கிறார் என்பது தான் படத்தின் கதை.இதில் வரலட்சுமி, அஞ்சலி, கேமியா ரோலில் வரும் ஆர்யா என கலகலப்பாக கதையை நகர்த்தி சென்றுள்ளார்.

ஆனால் அந்த சந்தேகமே வேண்டாம் என்பது போல் படம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அதிலும் ஆரம்பத்தில் இருந்து சந்தானத்தின் கவுண்டர் காமெடி படத்திற்கு பெரும் பலம்.சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு நேற்று திரைக்கு வந்த படம். விஷால் ''சமீபத்தில் 'மதகஜராஜா'. கூறுகையில், எனக்கு காய்ச்சல் சாதாரணமான தான் இருந்தது. இப்போது குணமாகி விட்டேன். கையெல்லாம் நடுங்கியது. இப்போது அந்த மாதிரி எந்தவொரு நடுக்கமும் இல்லை. மைக் சரியாக தான் பிடித்துள்ளேன். எல்லோரும் இந்த படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.சாகும் வரை உங்கள் அன்பை மறக்க மாட்டேன்" என்றார்.அந்த அளவுக்கு விஷாலுடன்,சந்தானம்   காமெடி கூட்டணி ரசிக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளது. சுந்தர் சி படம் என்றாலே நட்சத்திரங்களுக்கு பஞ்சம் இருக்காது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News